மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2021-07-11 19:27 GMT
பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாபேரி உலகாபுரம் தெருவைச் சேர்ந்தவர் சேர்மன் (வயது 39). மரம் ஏறும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறினார். 

அப்போது, அவர் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேர்மன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்