பரமத்தி அருகே விபத்தில் டிரைவர் பலி

பரமத்தி அருகே விபத்தில் டிரைவர் பலி.

Update: 2021-07-12 16:36 GMT
பரமத்திவேலூர்,

பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் வேலுமணி (வயது 47). டிரைவர். இவர் தனது மனைவி கார்த்திகா (43) மற்றும் குழந்தைகளுடன் கரூர் மாவட்டம் தளவாபாளையம் திலீப் நகரில் வசித்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் தாயாரை பார்க்க பரமத்தி அருகே உள்ள பில்லூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலுமணி வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு படுகாயமடைந்தார். 
படுகாயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேலுமணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்