685 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அருப்புக்கோட்டையில் 685 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன், நகர் நல மருத்துவர் கோமதி ஆகியோர் ஆலோசனையின்படி பொதுமக்களுக்கு செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர். முகாமில் 685 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ஐயப்பன், ராஜபாண்டி, சரத்பாபு, முத்து காமாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.