கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது
கஞ்சா பதுக்கிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாமி மற்றும் போலீசார் திருவண்ணாமலை டவுன் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது சமுத்திரம் காலனியை சேர்ந்த கவிதா (வயது 40), நளினி (28) மற்றும் அண்ணாநகரை சேர்ந்த தமிழரசன் (28) ஆகியோர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.