அன்னவாசல்
இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் சரளப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதில் மணல் கடத்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அரியக்கோன்பட்டியை சேர்ந்த யோகநாதன் (வயது 28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.