முதியவர் விஷம் குடித்து தற்கொலை

சுரண்டையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-18 20:41 GMT
சுரண்டை:
சுரண்டை அருகே ராஜபாண்டி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிவஞானசுந்தரம் (வயது 75). இவருக்கு காலில் ஏற்பட்ட புண் நீண்ட நாட்களாக குணமாகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று அதிகாலையில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்தார்.
இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்