கொரோனாவுக்கு 2 பேர் பலி

ராமநாதபுரத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்.

Update: 2021-07-19 18:19 GMT
ராமநாதபுரம், ஜூலை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 911 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 12 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 415 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 152 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 344 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்