முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-19 18:38 GMT
நச்சலூர்
நச்சலூர் அருகே உள்ள இனுங்கூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 85). இந்தநிலையில் கடந்த 6 மாதமாக ெபரியசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு (மூலநோய்) இருந்துள்ளார். இதற்காக பல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனால் கடந்த 16-ந்தேதி பெரியசாமி தனது மகன் அண்ணாத்துரை வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பெரியசாமியை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியசாமி மகன் அண்ணாதுரை கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்