மனைவி திட்டியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

மனைவி திட்டியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-20 21:31 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(வயது 42). கூலித் தொழிலாளியான இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், இதனால் அவருடைய மனைவி, தினமும் குடித்துவிட்டு வருகிறீர்களே, உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் குழந்தைகளை யார் பார்ப்பது என்று கேட்டு திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சவுந்தரராஜன் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துவிட்டு, வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்