திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 65 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று வரை 872 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 493 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 49 ஆயிரத்து 988 பேர் குணமடைந்து உள்ளனர். 633 பேர் உயிரிழந்து உள்ளனர்.