வாகனம் மோதி மான் பலி

அருப்புக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் இறந்தது.

Update: 2021-07-21 19:40 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தம் - மலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலம் அருகே காயமடைந்த நிலையில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வனக்காப்பாளர் அபிஸ் செல்வகுமார், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் வந்து இறந்து கிடந்த மானை மீட்டு சுக்கிலநத்தம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் இறந்தது தெரியவந்தது. அங்கு கால்நடை மருத்துவர் சத்தியபிரபா முன்னிலையில் உடற்கூறு செய்யப்பட்டு காட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்