சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திகேஸ்வரரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவில் உள்பிரகாரத்தில் பிரதோஷ நாயன்மார் வீதி உலா நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திகேஸ்வரரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவில் உள்பிரகாரத்தில் பிரதோஷ நாயன்மார் வீதி உலா நடந்தது.