2 முதியவர்களின் உயிரை பறித்த கொரோனா

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள்.

Update: 2021-07-22 16:26 GMT
தேனி:

தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 821 ஆக உயர்ந்தது.

 கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேனி பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர், 67 வயது முதியவர் ஆகிய 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இதனால் பலி எண்ணிக்கை 513 ஆக அதிகரித்தது. இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 21 பேர் குணமாகினர். தற்போது 247 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்