தென்காசியில் 10 பேருக்கு கொரோனா

தென்காசியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-07-22 20:44 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,720 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 26,092 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 478 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்