கோவையில் புதிதாக 177 பேருக்கு கொரோனா

கோவையில் புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-23 21:33 GMT
கோவை

கோவையில் நேற்று புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 85 வயது முதியவர், 75 வயது மூதாட்டி, 64 வயது ஆண், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 57 வயது ஆண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். 

கோவையில் இதுவரை 2,151 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதுதவிர கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 268 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். 

இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரத்து 381 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்