புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று

Update: 2021-07-24 16:55 GMT
புதுக்கோட்டை, ஜூலை.25-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து935 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 39 பேர் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 27 ஆயிரத்து203 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 360 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்