கரூர்
பிரதமர் பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து குண்டர் சட்டத்தில் அடைக்க வலியுறுத்தி நேற்று காலை கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி துணை தலைவர் மீனா வினோத்குமார் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு பாதிரியாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.