கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Update: 2021-07-24 21:22 GMT
அரியலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டங்களில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோரை காட்டிலும், அதில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 171 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 268 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 637 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 858 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
தற்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 2,571 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,771 பேருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் செய்திகள்