கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-07-26 09:59 GMT
கம்பம்:
கம்பத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்று கிடைக்கவில்லை. இதனால் கம்பம் வட்டார முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கம்பம் உத்தமபுரத்தில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கருப்பையா, பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், கடந்த வாரம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமில் மாற்றுத்திறனாளிகளை தரக்குறைவாக பேசிய டாக்டர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்