ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த ரெட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 39). இவர் பெரியாங்குப்பம் கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். அவர் டாக்டருக்கு படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக புகர்கள் வந்தது. அதன்பேரில் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் பெரியாங்குப்பம் கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
இதில் அவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மோகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.