பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-26 16:53 GMT
தேன்கனிக்கோட்ட:
தளி அருகே உள்ள டி.சூளகொண்டாவை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 22). இவர் 16 வயதான அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயவேலை கைது செய்தனர். மாணவியை அவரிடம் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்