திருக்கோவிலூர் அருகே புகையிலைப் பொருள் விற்பனை பெட்டிக்கடைக்கு சீல்

திருக்கோவிலூர் அருகே புகையிலைப் பொருள் விற்பனை பெட்டிக்கடைக்கு சீல்

Update: 2021-07-26 17:29 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பைபாஸ் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து கடை உரிமையாளர் காடியார் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி விசாலாட்சி(வயது 30) என்பவரை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 107 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன் அந்த கடைக்கு ‘சீல்’ வைத்தார்.

மேலும் செய்திகள்