குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-07-26 18:27 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வின்சென்ட் ராஜா (வயது27), கீழக்கரை ஜின்னா தெருவை சேர்ந்த நல்ல இப்ராகிம் மகன் சாகுல்ஹமீது (45) ஆகியோர் கஞ்சா விற்றது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் 2 பேரையும் கைது செய்ய மாவட்ட கலெக்டர் டாக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். இதன்படி 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்