சூதாடிய 4 பேர் கைது
சிவகாசி அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே மாரனேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கழிவறையின் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த சின்னபாண்டி (வயது 60), வேலுச்சாமி (46), சவுந்திரபாண்டியன் (49), செல்லையா (60) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து சீட்டு விளையாட பயன்படுத்திய ரூ.370-ஐ பறிமுதல் செய்தனர்.