விஷம் குடித்து பெண் தற்கொலை

நெல்லை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-26 19:01 GMT
நெல்லை:

நெல்லை சிவந்திப்பட்டி அருகே உள்ள குத்துக்கல் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகர் மனைவி பார்வதி (வயது 44). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பார்வதி சம்பவத்தன்று வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பார்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்