ஆற்காடு நகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
குடிநீர் வினியோகம் நிறுத்தம்
ஆற்காடு
ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட 1 முதல் 30 வார்டு வரையிலான பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் வேப்பூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கடந்த 26-ந் தேதி 250 கே.வி.ஏ. மின்மாற்றி பழுதடைந்தது. தற்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
மேற்கண்ட தகவலை நகராட்சி பொறியாளர் சரவணபாபு தெரிவித்துள்ளார்.