அரசு ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை; கலெக்டர் வழங்கினார்

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த அரசு ஊழியர் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையை, கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

Update: 2021-07-27 16:57 GMT
தூத்துக்குடி:
கொரோனா தொற்று காரணமாக இறந்த திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு உதவியாளர் அகஸ்டின் பெர்னாண்டோவின் மனைவி ஆரோக்கியமேரி மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா இழப்பீட்டு தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்