நூற்பு மில்லில் தீ விபத்து

விருதுநகரில் நூற்பு மில்லில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2021-07-27 19:04 GMT
விருதுநகர், 
விருதுநகர் பேராலி ரோட்டில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான நூற்புமில்உள்ளது. இதில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சேத மதிப்பு விவரம் தெரியவில்லை. மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி பாண்டியன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்