கொரோனாவுக்கு 2 பேர் பலி

கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-07-27 20:27 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 29 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 229 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 1,328 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,387 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்