அடையாளம் ெதரியாத பெண் பிணம்

சாத்தூர் அருகே அடையாளம் தெரியாத பெண் பிணத்தை போலீசார் கைப்பற்றினர்.

Update: 2021-07-28 19:23 GMT
சாத்தூர், 
சாத்தூர் அருகே நென்மேனி அரசரடி காலனி காட்டுப்பகுதியில் அழுகியநிலையில் 50 வயது மதிக்கதக்க ஒரு பெண் பிணம் கிடந்தது. இதுகுறித்து  மேலமடை கிராம நிர்வாக அலுவலர் பாண்டி கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்