இளையான்குடி பஜாரில் அனுமதியின்றி கொரோனா கால விதிமுறைகளை மீறி, அரசுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் நாகூர் மீரா, (பொறுப்பு) மாவட்ட எம்.ஜி.ஆர் துணைச்செயலாளர் அப்துல் குலாம், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் மலைச்சாமி உள்பட 35 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.