நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி சாவு எண்ணிக்கை 448 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி சாவு எண்ணிக்கை 448 ஆக அதிகரிப்பு

Update: 2021-07-31 16:59 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகினர். இதனால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 448 ஆக அதிகரித்து உள்ளது.
3 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 445 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று திருச்செங்கோடு, ராசிபுரம், காளப்பநாயக்கன்பட்டி பகுதிகளை சேர்ந்த 3 பெண்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 448 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 47 ஆயிரத்து 143 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 47,145 ஆக அதிகரித்து உள்ளது.
61 பேருக்கு கொரோனா
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,206 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று 42 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 46 ஆயிரத்து 165 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 593 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் சற்று அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
======

மேலும் செய்திகள்