ஆலந்தூர்,
திருவொற்றியூர் காலடிப்பேட்டை சோங்காவனபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மாநகர பஸ், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை சோங்காவனபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் பெரும்பாக்கம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மாநகர பஸ், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.