எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கோவில் வெளியே நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.