லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ராஜபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-07 21:07 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் வடக்கு போலீசாருக்கு கீழ ஆவரம்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்றனர்.  
அப்போது கட்டபொம்மன் தெருவில் லாட்டரி சீட்டினை நூதன முறையில் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 57) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.750-யை பறிமுதல் செய்த வடக்கு போலீசார், கணேசனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்