கொரோனா விழிப்புணர்வு முகாம்

சிவகங்கையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2021-08-08 18:14 GMT
சிவகங்கை,

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிரங்கால் ஊரக வளர்ச்சி் துறையின் மூலம் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சண்முகம் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, ஊராட்சி செயலர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாட்டு புறக்கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு குறித்த கையேடுகளும் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்