தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி

தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

Update: 2021-08-08 20:26 GMT
தென்காசி:
தென்காசியில் நேற்று 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 908 ஆக உள்ளது. 26 ஆயிரத்து 297 பேர் குணமடைந்து உள்ளனர். 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்காசியை சேர்ந்த 73 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இதனால் மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 484 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்