தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருமணம் தள்ளிப் போனதால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால், ஆக.
காரைக்கால் கும்சக்கட்டளை வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் கலைமணி (வயது 34). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு செய்து கடந்த சில ஆண்டுகளாக வரன் பார்த்து வந்தனர்.
ஆனால் சரியான வரன் அமையாததால் திருமணம் தள்ளிப்போனது. இதனால் விரக்தி அடைந்த கலைமணி, நேற்று முன்தினம் வீட்டு பின்பக்கம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.