கார் டிரைவர் திடீர் சாவு

கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்

Update: 2021-08-09 17:45 GMT
வெள்ளியணை
கோவை மாவட்டம் துடியலூர் அப்பாநாயக்கன்பாளையம் பகுதி கேப் டவுன் ரோஜா வீதியை சேர்ந்தவர் விமல் (வயது 37), கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது காரில் சவாரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள கொள்ளுதண்ணிபட்டி கோவிலுக்கு வந்தார். பின்னர் வெள்ளியணை வழியாக கோவைக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். அப்போது வெள்ளியணை மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து உடன் வந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தசம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்