தூக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தூக்கத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-11 17:11 GMT
காரைக்குடி,ஆக
காரைக்குடி கல்யாணி நகரில் வசித்து வந்தவர் முத்துக்குமார் (வயது 30). இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை. காரைக்குடியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவரது வீட்டின் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டாத மாடியின் முதல் தளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்