விபத்தில் விவசாயி சாவு

விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-13 20:31 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த வானத்திரையான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 59). விவசாயி. இவர் சம்பவத்தன்று சைக்கிளில் உடையார்பாளையம் கடை வீதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். உடையார்பாளையம்- சிலால் சாலையில் வந்த போது சாலையில் உலர வத்திருந்த எள் செடி சக்கரத்தில் சிக்கியதில் தடுமாறி சாமிநாதன் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சாமிநாதனை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமிநாதன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகள்