முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

அருப்புக்ேகாட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-08-14 19:44 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட கொரோனா ஆய்வுக்குழுவினை அமைத்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று சிறப்பு தாசில்தார் நாகேஸ் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டியன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகோபி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார், காவலர்கள் அடங்கிய கொரோனா ஆய்வுக்குழுவினர் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாத நபர்களுக்கும், தனிமனித இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்தனர். அத்துடன் முக கவசம் அணியாமல் வந்த 150 பேருக்கு சுகாதாரதுறை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற சோதனையில் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.5,200 அபராதமாக வசூலிக்கப்பட்டதாக ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்