வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Update: 2021-08-15 18:25 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் 18 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய பரிசோதனையின் முடிவில் மேலும் 12 பேருக்கு பாதிப்பு உறுதியானது. அதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 12 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,448 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,973 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,101 பேர் பலியாகி உள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்