அரசு ஊழியர் தற்கொலை

வேடசந்தூர் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-16 14:19 GMT
வேடசந்தூர் :

வேடசந்தூர் அருகே உள்ள குட்டத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 60). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் குட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவியும், 2 மகன்களும் சென்னையில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் வீட்டில் காளியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்