திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சத்தரை, கொண்டஞ்சேரி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்த 2 டிராக்டர், 2 மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் மணல் கடத்தியதாக புதுமாவிலங்கை பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 27), ஈனாக் (30) ஆகியோரை போலீார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.