மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை

மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-24 20:25 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கோரையாறு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் கோபிகா(வயது 16). இவர் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கோபிகா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தங்கராஜ் அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிகாவை யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்