தக்கோலம் அருகே மினி லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

மினி லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

Update: 2021-08-27 18:22 GMT
அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் காந்தி நகரை சேர்ந்த மாரி என்பவருடைய மகன் தமிழரசன் (வயது 26). இவர் புதுகேசாவரம் செக்போஸ்ட் பகுதியில் உள்ள நீரேற்றும் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த மினி லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த தமிழரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
 இது குறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்