பெரணமல்லூர் அருகே; ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை

பெரணமல்லூர் அருகே ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

Update: 2021-08-29 13:10 GMT
சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த திருமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 55). இவர், ஜவ்வாதுமலையில் உள்ள கோவிலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.  

இவருக்கு கலைச்செல்வி, செந்தாமரை என்ற மனைவிகள் உள்ளனர். கலைச்செல்வி பெங்களூருவில் வசித்து வருகிறார்.

செந்தாமரை செய்யாறில் வசித்து வருகிறார். பழனி இரு மனைவிகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

 அவருக்கு தனிமை வாட்டியதால் வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெரணமல்லூர் போலீசில் 2-வது மனைவி செந்தாமரை புகார் செய்தார். அதில் கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக, தெரிவித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் கோமளவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

பழனியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்