விருதுநகர் அல்லம்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமர் மணி (வயது 66). நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் குல்லூர்சந்தைரோட்டில் உள்ள ஒரு பருப்பு ஆலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராமர்மணி ஆலை வளாகத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அவரது சகோதரர் நாகமணி (68) கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.