கல்லூரி மாணவியின் தந்தையை கல்லால் தாக்கியவர் கைது

கல்லூரி மாணவியிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட தந்தையை கல்லால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-01 18:49 GMT
நொய்யல்,
தகராறு
கரூர் மாவட்டம் காகித ஆலையில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள புது குறுக்குபாளையம் 3-வது தெருவை சேர்ந்தவர் தீபக் (வயது 20). இவர் ஒரு கல்லூரி மாணவியிடம் நேற்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதில், பயந்துபோன அந்த மாணவி சத்தம் போடவே அருகில் இருந்த மாணவியின் தந்தை, தீபக்கை தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கைது
இதில் ஆத்திரம் அடைந்த தீபக் கீழே கிடந்த கல்லை எடுத்து கல்லூரி மாணவியின் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவியின் தாயார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரது தந்தையை கல்லால் தாக்கிய தீபக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்